செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கலாம்- கடலூர் கலெக்டர்

Published On 2018-11-18 03:58 GMT   |   Update On 2018-11-18 03:58 GMT
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நானை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்று கடலூர் கலெக்டர் அறிவித்துள்ளார் #GajaCyclone
கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் சாலை போக்குவரத்து, மின்சார வசதிகள் வழங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம். குடிநீர் பாட்டில்கள், போர்வை, உடைகள், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கலாம். இவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் என்று கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News