செய்திகள்

நாமக்கல் அருகே மகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-11-16 17:36 GMT   |   Update On 2018-11-16 17:36 GMT
நாமக்கல் அருகே மகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சுபநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், லாரி டிரைவர். இவரது மனைவி சங்கேஸ்வரி (வயது 27).

இவர்களுக்கு ரமீதா (5) என்ற மகள் உள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று ஜெயராஜ் வேலை விசயமாக வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சங்கேஸ்வரி இன்று காலை மகள் ரமீதா மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்தார். பின்னர் தானும் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் 2 பேரின் உடலிலும் தீ பற்றி எரிந்தது. வலியால் அவர்கள் அலறித் துடித்தனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தாயும் மகளும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் பிணங்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன காரணத்திற்காக சங்கேஸ்வரி மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை.

இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News