செய்திகள்

வேலூர் ஜெயிலில் 3 செல்போன்களை புதைத்து வைத்திருந்த சென்னை கைதி

Published On 2018-11-14 05:13 GMT   |   Update On 2018-11-14 05:13 GMT
வேலூர் ஜெயிலில் சென்னை கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #VelloreJail
வேலூர்:

சென்னை எண்ணூரை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 40). கொலை வழக்கில் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக தகவல் வந்தது.

இதனையடுத்து ஜெயில் காவலர்கள் ஜெயில் வளாகத்தில் சோதனையிட்டனர். அப்போது கார்மேகம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு பின்னால் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

இது குறித்து ஜெயில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கார்மேகம் 3 செல்போன்களை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது பற்றி பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் செல்போனில் இருந்து யாருடன் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #VelloreJail
Tags:    

Similar News