செய்திகள்

பேரூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2018-11-12 11:52 GMT   |   Update On 2018-11-12 11:52 GMT
பேரூர் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை பேரூர் அருகே உள்ள அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 68). சம்பவத்தன்று இவர் பேரூர்-கோவை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மாரியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News