செய்திகள்

குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்தார்: விடுதியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2018-11-11 12:24 GMT   |   Update On 2018-11-11 12:24 GMT
குடிப்பழக்கத்தால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்றார். இதனால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

மதுரை:

ஆரப்பாளையம் மேலப் பொன்னகரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி வந்ததால், மனைவி ஸ்ரீதேவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் ஸ்ரீதேவி கணவரை பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு பாண்டியராஜன் சென்று சமசரம் செய்து அழைத்த போதும், வர மறுத்து விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டியராஜன், நேதாஜி ரோட்டில் உள்ள விடுதியில்அறை எடுத்து தங்கினார். அங்கு தூக்குப்போட்டு பாண்டியராஜன் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கரிமேடு புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (34). சலவை தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பிரபாகரனின் குடிப்பழக்கம் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.

கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News