செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே என்ஜினீயருக்கு கத்திகுத்து விவசாயி கைது
ஊத்துக்கோட்டை அருகே என்ஜினீயரை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (27). என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் விவசாயி. இவர் நண்பர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனை சுதாகர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூபாலனும், விஜயகுமாரும் சேர்ந்து கத்தியால் சுதாகரை குத்தினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தார். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (27). என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் விவசாயி. இவர் நண்பர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனை சுதாகர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூபாலனும், விஜயகுமாரும் சேர்ந்து கத்தியால் சுதாகரை குத்தினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தார். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.