செய்திகள்
புயல் சின்னம்- அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. #IMD #IMDChennai #TNRains
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது. புயல் சின்னம் இருப்பதால் நாளை முதல் 13-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ, குடவாசலில் 4 செ.மீ மழை பதிவானது.
இவ்வாறு அவர் கூறினார். #IMD #IMDChennai #TNRains
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம். நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் தற்போதைக்கு மழை வாய்ப்பு குறைவு. புயல் நெருங்கும் போது மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ, குடவாசலில் 4 செ.மீ மழை பதிவானது.
இவ்வாறு அவர் கூறினார். #IMD #IMDChennai #TNRains