செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-02 13:15 GMT   |   Update On 2018-11-02 13:15 GMT
தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பட்டத்திற்கு கிளைச்செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ரெங்கசாமி, ராஜீ, அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றை தடையின்றி வழங்க உத்திரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பகுதி செயலாளர்கள் புத்தூர் நடராஜன், சிவமணி, சிவக்குமார், அவினாசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News