செய்திகள்
சிதம்பரத்தில் பார்சலில் வந்த குட்கா பறிமுதல்- மளிகை கடைக்காரர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று பார்சலில் வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மளிகை கடைக்காரர் கைதானார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தன்குடி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). இவர் வேணுகோபால் பிள்ளை தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாகவும், குட்கா பொருட்கள் இவருக்கு லாரி மூலம் பார்சலில் வருவதாகவும் சிதம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று காலை சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிதம்பரம் மேல வீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பார்சல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலில் குட்கா பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குட்கா பொருட்கள் ஜெயக்குமாரின் மளிகை கடைக்கு செல்வது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தன்குடி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). இவர் வேணுகோபால் பிள்ளை தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாகவும், குட்கா பொருட்கள் இவருக்கு லாரி மூலம் பார்சலில் வருவதாகவும் சிதம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று காலை சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிதம்பரம் மேல வீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பார்சல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலில் குட்கா பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குட்கா பொருட்கள் ஜெயக்குமாரின் மளிகை கடைக்கு செல்வது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.