செய்திகள்
வேல்ராம்பட்டில் ஆன்லைனில் போலி லாட்டரி சீட்டு விற்ற தந்தை, மகன் கைது
புதுவை வேல்ராம்பட்டு ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டு விற்ற தந்தை, மகனை கைது செய்த போலீசார் 2300 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். #fakelottery
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரில் ஒரு வீட்டில் ரகசியமாக ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் துலுக்கானத்தம்மன் நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள செல்வராஜ் என்பவர் வீட்டில் சிலர் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் செல்வராஜ்மற்றும் அவரது மகன் மதியழகன் (22) ஆகிய இருவரும் சேர்ந்து ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2300 போலி லாட்டரி சீட்டுகள், விற்பனை பணம் ரூ. 26 ஆயிரம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். #fakelottery
புதுவை வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரில் ஒரு வீட்டில் ரகசியமாக ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் துலுக்கானத்தம்மன் நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள செல்வராஜ் என்பவர் வீட்டில் சிலர் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் செல்வராஜ்மற்றும் அவரது மகன் மதியழகன் (22) ஆகிய இருவரும் சேர்ந்து ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2300 போலி லாட்டரி சீட்டுகள், விற்பனை பணம் ரூ. 26 ஆயிரம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். #fakelottery