செய்திகள்

வேலூர் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் காதலன் கைது

Published On 2018-10-30 11:25 GMT   |   Update On 2018-10-30 11:25 GMT
வேலூர் கல்லூரி மாணவி தற்கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகள் ஷாலினி (வயது 18). இவர் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஷாலினியும், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்த நகை அடகுகடை வியாபாரி பூபதி மகன் அருண் (20) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு காதலன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஷாலினியிடம் பேசுவதை காதலன் அருண் தவிர்த்தார். மனமுடைந்த ஷாலினி கடந்த 3-ந் தேதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த காதலன் தலைமறைவாகிவிட்டார். ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை தேடி வந்தனர்.

26 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்றிரவு காதலன் அருண் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News