செய்திகள்

105 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குகீழ் குறைந்தது

Published On 2018-10-30 09:55 GMT   |   Update On 2018-10-30 09:55 GMT
கடந்த 25-ந் தேதி 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 100.91 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி சரிந்து 99.88 அடியானது. #Metturdam
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி 100 அடியை எட்டியது.

அதே மாதம் 23-ந் தேதி அணையின் உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியதால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்து. பின்னர் பானத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மழை சற்று குறைந்ததாலும் கடந்த 5-ந் தேதி நீர்மட்டம் 101.79 அடியாக சரிந்தது.

இதற்கிடையே மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணைக்கு 24 ஆயிரத்து 764 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர ஆரம்பித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. நேற்று 2 ஆயிரத்து 989 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 538 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 17 ஆரம் கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 25-ந் தேதி 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 100.91 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி சரிந்து 99.88 அடியானது. இதனால் கடந்த 105 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Metturdam

Tags:    

Similar News