செய்திகள்

படப்பை அருகே வியாபாரி கொலையில் 2 பேர் கைது

Published On 2018-10-29 06:36 GMT   |   Update On 2018-10-29 07:18 GMT
படப்பை அருகே வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுர்:

படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்தார். இவரது மகன் ரவிக்குமார்.

நேற்று முன்தினம் சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனியப்பனையும், அவரது மகன் ரவிக்குமாரையும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், சதீஷ் தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ரவிக் குமாருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக படப்பை பகுதியில் பதுங்கியிருந்த பாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News