செய்திகள்

கல்பாக்கம் அருகே கணவரை மிரட்ட தீக்குளித்த பெண் பலி

Published On 2018-10-28 06:47 GMT   |   Update On 2018-10-28 06:47 GMT
கல்பாக்கம் அருகே கணவரை மிரட்ட தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). கார் டிரைவர். இவரது மனைவி கீதா ராதாகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் உண்டு.

இதனை கீதா கண்டித்து அடிக்கடி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கீதா தற்கொலை செய்யப்போவதாக கூறி மண்ணெய் உடலில் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கிருஷ்ணன் உடல் கருகிய மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார்.

புட்லூரை அடுத்த மலை வாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோதண்டராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை மனைவி கண்டித்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி மனைவி ஜெயலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு கோதண்டராமன் தகராறில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலட்சுமி பணம் கொடுக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த கோதண்டராமன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கோதண்டராமன் பரிதாமாக இறந்தார்.

Tags:    

Similar News