செய்திகள்

ரஜினியை சாடிய முரசொலி - இனி கவனத்துடன் செயல்படுவதாக ஆசிரியர் விளக்கம்

Published On 2018-10-27 22:00 GMT   |   Update On 2018-10-27 22:00 GMT
ரஜினியின் அரசியல் குறித்து சாடிய முரசொலி நாளிதழின் ஆசிரியர் இனி யாருடைய மனதும் புண்படாதபடி கவனத்துடன் செயல்படுவோம் என விளக்கம் அளித்துள்ளார். #Rajini #Murasoli #RajiniPolitics
சென்னை:

தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளுக்கான அவரது அறிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்த முரசொலி நாளிதழ், ரஜினியின் ரசிகரின் கேள்விகள் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

இது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடுமையாக சாடியதாக பலராலும் பேசப்பட்டதோடு, விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், முரசொலியின் தலைமை ஆசிரியர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

 

அந்த விளக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajini #Murasoli #RajiniPolitics
Tags:    

Similar News