செய்திகள்
பெண் தராததால் ஆத்திரம்- பள்ளி மாணவியை கடத்திய தாய்-மகன்
போடி அருகே பள்ளி மாணவியை கடத்திய தாய்-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி போடி சுப்புராஜ் நகரில் உள்ள விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சூர்ய பிரகாசுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க பெண் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு சிறுமியின் தந்தை மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மற்றும் அவரது தாய் சரவணம் ஆகியோர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியை கடத்திய சூரிய பிரகாஷ் அவரது தாய் சரவணம் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.