செய்திகள்

சிதம்பரத்தில் ஒரே நாளில் 4 கடைகளின் கதவை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-10-25 17:09 GMT   |   Update On 2018-10-25 17:09 GMT
ஒரேநாள் இரவில் 4 கடைகளில் பணம் திருடப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம்:

சிதம்பரம் மாலைகட்டி தெருவில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று இரவு மர்ம மனிதர்கள் அங்குள்ள ஒரு கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் கடையின் கதவை கடப் பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு கல்லாப்பெட்டியில் இருந்த 500 ரூபாயை திருடினர்.

அதன் பின்பு அருகில் இருந்து கம்ப்யூட்டர் சென்டரின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த எமர்ஜென்ஸ்சி விளக்கை திருடினர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த மற்றொரு கம்ப்யூட்டர் சென்டரின் கடையை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.1200-ம், அருகில் உள்ள கட்டிட நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு 1 வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரூ.11 ஆயிரத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

இன்று காலை கடையின் உரிமையாளர்கள் கடையை திறக்கவந்தனர். அப்போது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச் சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பணம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து அவர்கள் சிதம்பரம் நகர குற்றபிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடைகளில் புகுந்து பணம் திருடிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

ஒரேநாள் இரவில் 4 கடைகளில் பணம் திருடப்பட்ட சம்பவம் சிதம்பரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News