செய்திகள்

வேலூர் ஜெயிலில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு

Published On 2018-10-25 10:26 GMT   |   Update On 2018-10-25 10:26 GMT
வேலூர் ஜெயிலில் மேலும் ஒரு கைதி உடல் நலக்குறைவால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கின்றனர்.

ராஜீவ்காந்தி கொலை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று, மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன்காந்திக்கு வயிறு பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலு என்ற கைதி திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இன்று மேலும் ஒரு கைதி இறந்தார்.

தர்மபுரி கடத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 54). 2013-ம் ஆண்டு கொலை வழக்கில் 5 வருட தண்டணை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

ஜெயிலில் மேலும் ஒரு கைதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News