செய்திகள்

கேரளாவில் புதிய அணை கட்ட ஆய்வு- என்ஆர் தனபாலன் கண்டனம்

Published On 2018-10-25 10:12 GMT   |   Update On 2018-10-25 10:12 GMT
கேரளாவில் புதிய அணை கட்ட மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும் என என்ஆர் தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லை பெரியாரில் ஏற்கனவே 123 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய அணை நல்ல நிலையில் இருக்கிறபோது புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் அனுமதி வழங்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு செல்வாக்கும், வாக்கு வங்கியும் இல்லாததால் தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News