செய்திகள்
கும்பகோணத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் எரிப்பு- மர்மநபர்கள் கைவரிசையா?
கும்பகோணத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் எரித்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் பேட்டை பாசிகாரன் தெருவைச் சேர்ந்தவர் சம்மந்தம் (வயது 73). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அதனை நள்ளிரவு மர்மநபர்கள் தீவைத்து எரிந்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை எழுந்த சம்பந்தம் தனது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து போய் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.