செய்திகள்
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பிளஸ்-2 மாணவர் பலி
கும்பகோணத்தில் 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் மேல புளியபேட்டையை சேர்ந்த சண்முகம் மகன் காளீஸ்வரன் (வயது 22).இவரும், காமராஜர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அஜித்குமார் (16). என்பவரும் நேற்று இரவு ஒருமோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கும்பகோணம் பைபாஸ் சாலையில் சென்றபோது பெருமாண்டியை சேர்ந்த ஸ்ரீஹரி (18) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் மடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.காயமடைந்த ஸ்ரீஹரியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
விபத்தில் பலியான அஜித்குமார் பிளஸ்-2 மாணவர் ஆவார். தனியார் பள்ளியில் படித்து வந்தார். காயமடைந்த ஸ்ரீஹரி அரியலூர் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கும்பகோணம் மேல புளியபேட்டையை சேர்ந்த சண்முகம் மகன் காளீஸ்வரன் (வயது 22).இவரும், காமராஜர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அஜித்குமார் (16). என்பவரும் நேற்று இரவு ஒருமோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கும்பகோணம் பைபாஸ் சாலையில் சென்றபோது பெருமாண்டியை சேர்ந்த ஸ்ரீஹரி (18) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் மடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.காயமடைந்த ஸ்ரீஹரியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
விபத்தில் பலியான அஜித்குமார் பிளஸ்-2 மாணவர் ஆவார். தனியார் பள்ளியில் படித்து வந்தார். காயமடைந்த ஸ்ரீஹரி அரியலூர் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews