செய்திகள்

வேலூர் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியதில் கோஷ்டி மோதல்- 5 பேர் கைது

Published On 2018-10-21 17:22 GMT   |   Update On 2018-10-21 17:22 GMT
வேலூர் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்:

வேலூர் விருபாட்சிபுரம் காந்திநகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் சிவா இவரும் தனது நண்பர்களுடன் மைதனத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சத்யராஜ் நண்பர்களுக்கும் சிவாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள். சத்யராஜ் மற்றும் அவரது நண்பர்களை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த சத்யராஜ், மற்றும் செல்வத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து சத்யராஜ் தரப்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பலவன்சாத்துகுப்பம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (வயது 22), சிவா (17), பரத் (21), அருண்குமார் (22), அஜித் (29). ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News