செய்திகள்
அதிகமாக பில்போட்டு ரூ.4 லட்சம் கையாடல் - தனியார் விடுதி கேஷியர் மீது வழக்கு
பெருந்துறையில் உள்ள ஒரு லாட்ஜில் 4 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கேசியர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஜோதிக்குமார் என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் லாட்ஜில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனது நிறுவனத்திற்கு தெரியாமல் அதிகமாக பில் போட்டு கொடுத்து குறைவாக கணக்கு காண்பித்து வந்துள்ளார். கடந்த வாரத்தில் இந்த சம்பவம் லாட்ஜின் மேனேஜருக்கு தெரியவந்தது.
அவர் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக ஜோதிக்குமாரிடம் விசாரித்ததில் அவர் ரூபாய் 4 லட்சம் வரை கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பேரில் பெருந்துறை போலீசில் மேனேஜர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஜோதிக்குமார் என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் லாட்ஜில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனது நிறுவனத்திற்கு தெரியாமல் அதிகமாக பில் போட்டு கொடுத்து குறைவாக கணக்கு காண்பித்து வந்துள்ளார். கடந்த வாரத்தில் இந்த சம்பவம் லாட்ஜின் மேனேஜருக்கு தெரியவந்தது.
அவர் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக ஜோதிக்குமாரிடம் விசாரித்ததில் அவர் ரூபாய் 4 லட்சம் வரை கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பேரில் பெருந்துறை போலீசில் மேனேஜர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.