செய்திகள்

லாலாப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Published On 2018-10-17 11:03 GMT   |   Update On 2018-10-17 11:03 GMT
லாலாப்பேட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

லாலாப்பேட்டை:

லாலாப்பேட்டை கெடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (33கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிகளை கடந்த 13-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். 

விசாரணையில் பிள்ளபாளையத்தை சேர்ந்த செல்வம் (45) என்பவர் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய செல்வத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News