செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி

Published On 2018-10-15 11:02 GMT   |   Update On 2018-10-15 11:02 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். பேராசிரியர் படுகாயம் அடைந்தார்.

திருவெண்ணைநல்லூர்:

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசபாபு. இவரது மகள் சாய்மானஷா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி படித்து வந்தார்.

அதே கல்லூரியில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பென்திலிப் (30) என்பவர் பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு சாய்மானஷாவும், பென்திலிப்பும் சுற்றுலா செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கேரளா மூணாறுக்கு புறப்பட்டனர். அந்த மோட்டார் சைக்கிள் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அடுத்த அரசூர் பகுதியில் வந்த போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது திடீரென மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சாய்மானஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பென்திலிப் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பலத்த காயம் அடைந்த பென்திலிப்பை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News