செய்திகள்

விமானத்தில் ஏறிய மலேசிய பயணி மரணம்

Published On 2018-10-15 10:00 GMT   |   Update On 2018-10-15 10:00 GMT
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய போது மலேசிய பயணி திடீரென மயங்கி விழுந்து பலியானார். #ChennaiAirport
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு இன்று அதிகாலை விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்வதற்காக மலேசியாவைச் சேர்ந்த கப்பல் என்ஜினீயர் நூர்பின்பார் (54) என்பவர் வந்தார். அவர் விமானத்தில் ஏறிய போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் மஞ்சள் காமாலை நோய்க்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். இன்று காலை அவர் சொந்த நாட்டுக்கு திரும்ப விமானத்தில் ஏறியபோது இறந்து விட்டார். #ChennaiAirport
Tags:    

Similar News