செய்திகள்

செங்கல்பட்டில் வீட்டில் பதுக்கிய ரே‌ஷன் அரிசி, பாமாயில் பறிமுதல்- பெண் தப்பி ஓட்டம்

Published On 2018-10-15 08:00 GMT   |   Update On 2018-10-15 08:00 GMT
செங்கல்பட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் பாமாயிலை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுன், மக்கான் தெருவில் உள்ள வீட்டில் ரே‌ஷன் அரிசி, பாமாயில் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தாசில்தார் பாக்யலட்சுமி, வட்ட வழங்கல் அலுவர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சகிலா என்பவரது வீட்டில் 3 டன் ரே‌ஷன் அரிசி, 65 பாமாயில் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்ததும் சகிலா தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட பாமாயில் பாக்கெட்டுகள் எந்த ரே‌ஷன் கடையில் வாங்கப்பட்டது.இதில் தொடர்புடைய ரே‌ஷன் கடை ஊழியர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News