செய்திகள்
பஸ்சில் சீட் பிடிப்பதில் தகராறு: போலீசாரை தாக்கிய 3 பேர் கைது
சத்திரக்குடி அருகே பஸ்சில் சீட் பிடித்த தகராறில் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்:
சத்திரக்குடி அருகேயுள்ள இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாத துரை (வயது 47). இவர் ராமநாதபுரத்தில் உள்ள போலீஸ் பணியிடை பயிற்சி முகாமில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று தனியார் பஸ்சில் சென்றபோது காலியாக உள்ள சீட்டில் அமர்ந்து உள்ளார். ‘இது ஏற்கனவே இடம் பிடித்த இடம், எழுந்து விடுங்கள்’ என்று பரமக்குடியைச் சேர்ந்த ராஜேந்திர பிரபு (38) என்பவர் தகராறு செய்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக பஸ் கண்டக்டர் முரளி (26), செக்கர் சூரிய பிரகாஷ் (20) ஆகியோர் சேர்ந்து கொண்டு காசிநாத துரையை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து தலைமை காவலரை தாக்கிய 3 பேரையும் கைது செய்தார்.