பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சைக்கிள் ஊர்வலம்
புதுச்சேரி:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
அண்ணாசிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் விக்கிரமாதித்தன், ரவீந்திரன், இந்திரஜித், பொதுச்செயலாளர்கள் புருஷோத், ஹரீஸ், செயலாளர்கள் கவுதம், கார்த்திக், மாவட்ட தலைவர் ஆனந்தவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி சைக்கிளில் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு வந்தனர். ஊர்வலம் நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால்நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். #Congress #PetrolPriceHike