செய்திகள்

திருச்செந்தூர் அருகே கார் மோதி வங்கி ஊழியர் காயம்

Published On 2018-10-12 16:33 GMT   |   Update On 2018-10-12 16:33 GMT
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் காயம் அடைந்தார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரம் வீரபாண்டியன் பட்டணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58) இவர் திருச்செந்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆறுமுகநேரி வங்கிக்கு கூடுதல் பணிக்காக சென்றுள்ளார். பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது காயல்பட்டிணம் தனியார் கல்லூரி அருகில் தனது மோட்டார் சைக்கிளில் வரும்போது எதிரே வந்த கார் மோதியுள்ளது. 

 இதில் காயமடைந்த இவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் காரை ஓட்டிவந்த சென்னை சிட்லபாக்கம் முத்துலெட்சுமிநகரைச் சேர்ந்த முகமது சுபேர் மீது  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News