செய்திகள்

சென்னையில் 26 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

Published On 2018-10-12 15:07 IST   |   Update On 2018-10-12 15:07:00 IST
சென்னையில் நேற்று ஒரே நாளில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #PoliceInspectors
சென்னை:

கானாத்தூர் சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆனந்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். சிட்லபாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அதே காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகியுள்ளார்.

நொளம்பூரில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். ராயலா நகரில் பணியாற்றிய சுப்பிரமணியன், வளசர வாக்கத்துக்கும், வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பசுபதி அண்ணா சதுக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அண்ணா சாலை இன்ஸ்பெக்டராக தங்கராஜ், மாம்பலம் இன்ஸ்பெக்டராக மோகன்ராஜ், வியாசர்பாடி இன்ஸ்பெக்டராக பிரபு, நொளம்பூருக்கு சத்தியலிங்கம் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார். #PoliceInspectors

Tags:    

Similar News