செய்திகள்

சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது

Published On 2018-10-12 04:28 GMT   |   Update On 2018-10-12 04:28 GMT
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபருக்கு கால் துண்டாது. ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:

சேலம் கருங்கல்படி தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 40). இவர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டார்.

இந்த ரெயில் இன்று காலை 5.30 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தேவேந்திரன் ரெயிலில் இருந்து இறங்கினார்.

அப்போது நிலை தடுமாறிய அவர் ரெயிலுக்கும் பிளாட்பாரமுக்கும் இடையில் விழுந்தார். இதில் அவரது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்ட ரெயில்வே போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News