செய்திகள்
திருச்சியில் பிரபல ரவுடி திடீர் கைது
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி திடீரென கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி சுப்பிரமணியபுரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவரை நேற்று ரோட்டில் சென்ற போது ஒரு வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்து விட்டு தப்பி சென்றார்.
இது குறித்து லாரன்ஸ் பொன்மலை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பணத்தை பறித்து விட்டு தப்பித்தவர் பிரபல ரவுடி நார்த் டி பாஸ்கர் எனத் தெரியவந்தது.
பாஸ்கரை பொன்மலை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். பாஸ்கர் மீது தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் நேற்று முன்தினம் ரவுடி சந்துரு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் தேடி பிடித்து வருகிறார்கள். ஜாமீனில் விடுதலையாகியுள்ள ரவுடிகளையும் கண்காணித்து வருகிறார்கள். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் தினசரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.