செய்திகள்
பாகூர் அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
புதுவை பாகூர் தாமரைக்குளம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது55).தொழிலாளி. இவர் கடந்த 29-ந்தேதி சென்னைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஏகாம்பரம் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் ஏகாம்பரத்தின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஏகாம்பரத்தை தேடி வருகின்றனர்.