செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-10-10 04:48 GMT   |   Update On 2018-10-10 04:48 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்காளக நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

கர்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டராம்பாளையம் ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை பெய்த பரவலான மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

மழை குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து 7400 கனஅடியாக குறைந்தது. மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சற்று அதிகரித்து நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இதனால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகள் மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News