செய்திகள்

மதுரை அருகே காவலாளி குத்திக்கொலை

Published On 2018-10-09 16:52 IST   |   Update On 2018-10-09 16:52:00 IST
மதுரை அருகே காவலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டை அருகே உள்ள அண்டமான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது50). இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக இருந்தார்.

இவருக்கு சிவனம்மாள் (45) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

நேற்று இரவு ராஜேந்திரன் வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்று விட்டார். இன்று காலை அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்குள்ள வீட்டில் ராஜேந்திரன் சரமாரியாக குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் எம்.சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News