செய்திகள்

போதை பொருள் விற்ற 6 பேர் கைது- 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2018-10-06 12:44 GMT   |   Update On 2018-10-06 12:44 GMT
மதுரை அருகே போதை பொருள் விற்றதாக 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை:

தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை திருட்டுத்தனமாக விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மதுரை வைகை தென்கரை சர்வீஸ் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைதானவர்கள் சின்னராஜ் (வயது 30) அய்யனார்குளம், உசிலம்பட்டி, காவேரி (35) என தெரிய வந்தது.

இதேபோல் தல்லாகுளம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக திருப்பதி, பாலா, மாணிக்கம், பெரியவீரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 583 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
Tags:    

Similar News