செய்திகள்

பாகூரில் பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-10-04 12:46 GMT   |   Update On 2018-10-04 12:46 GMT
பாகூரில் தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41), டிரைவர். இவருடைய மனைவி அலமேலு. இவர்களுடைய மகன் சிவபாலன் (16). இவர் கடலூரில் உள்ள கங்கனாகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இவர் பள்ளியின் காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றார். தேர்வில் சரியான மதிப்பெண்கள் வாங்காததால் சரவணன் மனைவி அலமேலுவிடம் சிவபாலன் சரியாக படிக்காமல் இருந்து வருகிறான் அவனை ஒழுங்காக படிக்க சொல் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சிவபாலனை தாய் அலமேலு கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவபாலன் அம்மா திட்டி விட்டதாக கூறி இரவு முழுவதும் வீட்டிலேய நடந்து கொண்டிருந்தான். அப்போது தந்தை சரவணன் ஏன் தூங்க வில்லை, உடல்நலம் சரியில்லையா என்று கேட்டதற்கு சிவபாலன் ஒன்றும் இல்லை என்று கூறி அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டான்.

இன்று காலை தனது மகனை அலமேலு பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிறது சீக்கிரம் எழுந்திரு என்று கூறி தாய் கூப்பிட்டார் . அதற்கு பதில் எதுவும் இல்லாததால் அலமேலு கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பேன் கொக்கியில் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாகூர் போலீசில் சரவணன் புகார் தெரிவித்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News