செய்திகள்
காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கிய காட்சி.

ஓசூர் அருகே காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-10-04 07:15 GMT   |   Update On 2018-10-04 07:15 GMT
ஓசூர் அருகே எதிரெதிரே வீட்டை சேர்ந்தவர்கள் காதலித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாவரபந்தம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமப்பா. இவரது மகன் ஏம்மண்ணா (வயது 26). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது வீட்டின் எதிரே சூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரம்மா (21) என்ற மகள் உள்ளார்.

எதிரெதிரே வீடு என்பதால் ஏம்மண்ணாவும், சூரம்மாவும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இதனால் 2 பேரும் சகஜமாக பழகுவதாக அவர்கள் பெற்றோர்கள் எண்ணியதாக தெரியவந்தது.

2 பேரும் கடந்த 2 வருடங்களாக வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினருக்கு சிறு தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால் இரு குடும்பத்தாரும் கடந்த சில நாட்காளக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தனர். ஆனால் காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் தங்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களோ? என்ற மன வருத்தத்தில் இருந்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இருவீட்டாரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். ஆனால் காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் வீட்டில் இருந்து வெளியேறினர்.

அவர்கள் அருகே உள்ள அனுமப்பாவுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புளியமரத்தில் காதல்ஜோடி ஏம்மண்ணாவும், சூரம்மாவும் ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் காதல் ஜோடி 2 பேரும் மரத்தில் பிணமாக தூங்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களை கட்டிபிடித்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ. சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். காதல் ஜோடி 2 பேரும் பெற்றோர்கள் தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்று எண்ணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எதிரெதிரே வீட்டை சேர்ந்தவர்கள் காதலித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News