செய்திகள்
அரியலூரில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
அரியலூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடுகூர்கோனார்குளம் அருகே மறைத்து வைத்து ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மது பாட்டில்களை விற்றது கடுகூரை சேர்ந்த ஆதிமூலம் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் மண்ணுழி சுடுகாடு பகுதியில் மது விற்ற அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் 2 பேரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடுகூர்கோனார்குளம் அருகே மறைத்து வைத்து ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மது பாட்டில்களை விற்றது கடுகூரை சேர்ந்த ஆதிமூலம் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் மண்ணுழி சுடுகாடு பகுதியில் மது விற்ற அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் 2 பேரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.