செய்திகள்

சிவகங்கையில் வேலை வாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடக்கிறது

Published On 2018-09-26 10:50 GMT   |   Update On 2018-09-26 10:50 GMT
வருகிற 28-ந் தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
சிவகங்கை:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதன் அடிப்படையில் வருகிற 28-ந் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில் தனியார் நிறுவனம் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிநாடுனர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்று சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News