செய்திகள்

வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின்பறிப்பு

Published On 2018-09-25 15:56 IST   |   Update On 2018-09-25 15:56:00 IST
வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் வேலப்பாடி பி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News