செய்திகள்

ராஜராஜ சோழன் சிலை விவகாரம் - சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க மேலும் 6 வாரம் அவகாசம்

Published On 2018-09-25 10:14 GMT   |   Update On 2018-09-25 10:14 GMT
ராஜராஜ சோழன் சிலைக்கு சொந்தம் கொண்டாடும் கிரா சாராபாய் மனுவிற்கு பதிலளிக்க சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட் மேலும் 6 வார அவகாசம் அளித்துள்ளது. #IdolTheftCase #RajaRajaCholanIdol
சென்னை:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ராஜ ராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து சிலைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சாராபாய் அறக்கட்டளை நிர்வாகி கிரா சாராபாய் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கிரா சாராபாய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



தங்களிடம் இருந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல்  தடுப்புபிரிவு எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவை 1960ஆம் ஆண்டு காணாமல்போன சிலைகள் தான் என்பதை நிரூபித்து விட்டால், அவற்றை வழங்கி விட தயாராக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு 6 வாரத்திற்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க மேலும் 6 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolTheftCase #RajaRajaCholanIdol #GiraSarabhai #MadrasHC
Tags:    

Similar News