ஈரோட்டில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் மழை
ஈரோடு:
ஈரோட்டில் நேற்று மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. இரவில் மழையின் வேகம் அதிகரித்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டியது.
பின்னர் வேகம் குறைந்து மிதமான மழை பெய்தது. நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இடியின் சத்தம் நீண்ட நேரம் நீடித்தது.
இந்த இடி சத்தம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொது மக்கள் தட்டி எழுப்பியது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தூக்கத்தையும் தொலைத்தனர்.
ஈரோட்டில் பெய்தது போல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.பவானி சாகர் பகுதியில் அதிக அளவாக 64 மி. மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் 59.2
கொடிவேரி 30.2
அம்மாபேட்டை 28.6
ஈரோடு 25
கொடுமுடி 2.4
பவானிசாகர் பகுதியில் அதிக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து ஆற்றுக்கு 1050 கன அடி தண்ணீரும், வாய்க்காலுக்கு 2300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.29 கன அடியாக உள்ளது.