செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை
நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #Robbery
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு, வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை காமராஜ் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. அதிர்ச்சியடைந்து பீரோவை பார்த்தார் அப்போது அதில் இருந்த நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து காமராஜ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். #Robbery