செய்திகள்

சென்னை கண்காட்சியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள வைர நகை திருட்டு

Published On 2018-09-22 03:18 GMT   |   Update On 2018-09-22 03:18 GMT
எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் நடைபெற்ற வைர நகை கண்காட்சியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள வைர நகை திருட்டு போனதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் வைர நகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிறைய பொதுமக்கள் வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர்.

நேற்று நகைகளை சரிபார்த்தபோது ரூ.14 லட்சம் மதிப்புள்ள வைர நகையை காணவில்லை. யாரோ திருடிச்சென்று உள்ளனர். இது குறித்து எழும்பூர் போலீசில், கண்காட்சி நடத்துபவர்கள் புகார் தெரிவித்தனர். இதையொட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.  #JewelRobbery
Tags:    

Similar News