அரக்கோணம் ரைஸ் மில் அதிபரிடம் ரூ.2.70 லட்சம் திருட்டு
அரக்கோணம்:
திருத்தணியை சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 45) ரைஸ் மில் வைத்துள்ளார். இவர் அரக்கோணம் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் தனது கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு அதை ஒரு கவரில் சுற்றி பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு திருத்தணி நோக்கி சென்றார்.
அப்போது வழியில் தனியார் கல்லூரி முன்பு உள்ள டீ கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பைக் அருகே வந்தபோது பெட்டி திறந்திருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே இருந்த பணத்தை காணவில்லை. பணம் திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அங்கே நிறைய பைக்குகளும் ஆள் நடமாட்டமும் இருந்தது பதட்டத்துடன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது யாருக்கும் தெரியவில்லை என்று கூறினார்கள்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.