அரக்கோணம்-அரிகலபாடி பகுதியில் குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதி
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அரிகலபாடி ஊராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு முன் குரங்குகள் அதிக அளவில் இருந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சிலர் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட முடிவு செய்து குரங்கு ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து கூண்டுகள் வைத்து பிடித்து வாகனங்கள் மூலம் தொலை தூரத்தில் உள்ள காட்டு பகுதிகளில் விட்டுவிட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஏதோ ஒரு ஊரிலிருந்து இரவு நேரத்தில் வாகனங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளை இந்த பகுதியில் விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் குரங்குகள் நடமாட்டம் மீண்டும் இப்பகுதியில் அதிகரித்துள்ளது. மீண்டும் மக்கள் துயரமான நிலையில் உள்ளனர். பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளில் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றுவிடுகிறது. இதற்கு தீர்வு தெரியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.