செய்திகள்
ராணிப்பேட்டை அருகே பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் நிறுவன நுழைவு வாயில் முன்பு, நிறுவன மேற்பார்வையாளர்கள் ஊதிய மாற்ற அறிவிக்கையை காணொலி காட்சி மூலம் வெளியிட்டதை கண்டித்தும், பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பீடை ஈடுசெய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக பெல் ஊரக வளாகத்தில் தொடங்கி பெல் நிறுவன நுழைவு வாயில் வரை ஊர்வலமாக சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொது செயலாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ரத்தீஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.