செய்திகள்

காங்கிரஸ் மனித உரிமை தலைவர் அப்துல் சமதுக்கு டாக்டர் பட்டம்

Published On 2018-09-20 11:05 GMT   |   Update On 2018-09-20 11:05 GMT
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் அப்துல் அமதுக்கு சமூக சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை:

வடசென்னை மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் எஸ்.அப்துல் சமதுவின் சமூக சேவையை பாராட்டி உலக செம்மொழி தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டத்தை நீதிபதிகள் என்.எப்.ஜே. பொன்னுதுரை, என்.வைத்யநாதன், வெங்கடேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்வரன்சிங் ஆகியோர் வழங்கினர்.

இதையொட்டி அப்துல் சமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் வால் டாக்ஸ் ரோடு ரமேஷ், ஆர்.கே. நகர் சம்சு, ராயபுரம் ஏ.எஸ்.டி.மணி, பி.தாஸ், கே.கிருஷ்ண மூர்த்தி, டி.தன பால், சுதாகர், ராயபுரம் மாரி ஆகியோர் சென்றிருந்தனர். #Congress
Tags:    

Similar News